For Quick Alerts
For Daily Alerts
Just In
கன மழையால் 'கொடைக்கானல்' ஆன தமிழ்நாடு!
கொடைக்கானல்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து கொடைக்கானலில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கன மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
மலைச் சாலைகளான பேத்துப்பாறை, பெருமாள் மலை, லாஸ்காட் சாலை, வட்ட மலை ஆகிய இடங்களில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த மழையால் கொடைக்கானல் முழுவதும் மிகக் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் தமிழகத்தின் பிற பகுதிகளும் கொடைக்கானல் போலத்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Monday, December 6, 2010, 14:56 [IST]