வேலையில்லாத இளைஞர்களுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்து விட்டு, வேலைக்காக காத்திருப்போர் அரசின் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட வேலைவாய்பப்பு அலுவலக உதவி இயக்குநர் விஜயக்குமார் கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடித்தும் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவி பெற அவர்கள் வேலைவாய்ப்பு பதிவை தொடர்ந்து புதுப்பித்து இருக்கவேண்டும். ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications