ரவுடிகளுக்கிடையேயான முன்விரோதம்-பெங்களூரில் கவுன்சிலர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூர் பனசங்கரி வார்டு பகுதி மாநகராட்சி கவுன்சிலர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பெங்களூர் மாநகராட்சியின் பனசங்கரி வார்டு மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் கவுன்சிலராக இருந்தவர் திவான் அலி. இவர் முன்னாள் ரவுடி ஆவார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட
27 வழக்குகள் உள்ளன.
இந் நிலையில் இன்று காலை அவரை மோனோ டைப் பில்டிங் பகுதியில் 7பேர் வழிமறித்து அரிவாள்களால் வெட்டிவிட்டு சுட்டனர். இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்த இருவர் பலத்த காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர். முன் பகை காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications