பஞ்சாப் ஆளுநர் கொலை எதிரொலி: சர்தாரியின் பாதுகாப்புக்கு அமெரிக்கர்களை நியமிக்க பாக். முயற்சி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தசீர் அன்மையில் தனது பாதுகாவலராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து பாகிஸதான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பாதுகாப்புக்கு அமெரிக்காவில் இருந்து வீரர்களைத் தருவிக்க ஆலோசனை நடந்து வருகிறது என்று ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
இது குறித்து தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் செய்தித்தாளில் கூறியிருப்பதாவது,
சர்தாரியின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். எனவே பிரதமர், மாகாண ஆளுநர்கள், முதல்வர்கள், சில அமைச்சர்கள் உள்ளிட்ட விவிஐபிக்களின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு பாதுகாவலர்களை நியமிக்க அரசு ஆலோசித்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சர்தாரியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே மிரட்டல்கள் உள்ளன. எனவே அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சர்தாரியைப் பாதுகாக்க அமெரிக்கர்களை நியமிக்க பாகிஸ்தான் அரசு முயலுவது பாகி்ஸ்தானில் புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications