விருதுநகர் அருகே பட்டாசு விபத்தில் 6 பேர் பலி

சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி அருகே பெரிய ஆவுடையானூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ராஜேஷ் கண்ணன் என்பவருக்குச் சொந்தமாக பட்டாசு குடோன் உள்ளது. இங்கு இன்று காலை ஒன்பதே கால் மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து அங்கு இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
அமைச்சர் நேரில் விசாரணை:
சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகம், எஸ்.பி. பிரபாகரன் ஆகியோரும் சென்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications