ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது மத்திய அரசு சுண்டு விரலைக் கூட அசைக்காதது ஏன்?-ஜெ. கேள்வி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடன் தனக்குள்ள உறவு குறித்து ஜனவரி மாதம் 15ந் தேதியன்று நடைபெற்ற ஒரு விழாவில் விரிவாக விளக்கி இருக்கிறார் முதல்வர் கருணாநிதி. எப்பொழுததெல்லாம் நான் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுகோள் வைக்கிறேனோ, அப்பொழுதெல்லாம் அதை ஏற்றுக் கொள்ள முதலில் தயக்கம் காட்டும் காங்கிரஸ் பின்னர் அதனை ஏற்றுக் கொண்டு விடும் என்று கூறி இருக்கிறார்.
காவிரி, பாலாறு, பொண்ணையாறு ஆகிய நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டிற்குள்ள நியாயமான பங்கு ஏன் கிடைக்கவில்லை என்பது இப்போது நமக்குத் தெரிகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு அரசால் ஏன் செயல்படுத்த முடியவில்லை என்பது இப்போது நமக்குத் தெரிகிறது.
அப்பாவி தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை கடற்படையை தடுத்து நிறுத்த ஏன் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இப்போது நமக்குத் தெரிகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறிப்பாக காய்கறிகள், உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் விலைகளை குறைக்க ஏன் எதையும் செய்யவில்லை என்பது இப்போது நமக்குத் தெரிகிறது.
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை தடுத்து நிறுத்த மத்திய அரசு ஏன் தனது சுண்டு விரலை கூட அசைக்கவில்லை என்பது இப்போது நமக்குத் தெரிகிறது. இதற்கு காரணம், இந்தக் கோரிக்கைகைளை எல்லாம் கருணாநிதி மத்திய அரசிடம் முன் வைக்கவில்லை.
கருணாநிதியே குறிப்பிட்டது போல் இந்தக் கோரிக்கைகளை எல்லாம் கருணாநிதி வைத்திருந்தால், காங்கிரஸ் முதலில் தயக்கம் காட்டியிருந்தாலும், பின்னர் அதனை ஏற்றுக் கொண்டு இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இத்தனை நாட்களாக காங்கிரஸையும், மத்திய அரசையும் சாடாமல் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்தார் ஜெயலலிதா. இதற்காக ஈழத் தமிழர் பிரச்சினையைக் கூட அவர் ஓரம் கட்டி விட்டார். ஆனால் தற்போது காங்கிரஸுடன் கூட்டணி வர வாய்ப்பில்லை என்பது உறுதியானதும் மீண்டும் காங்கிரஸையும், மத்திய அரசையும் சாட ஆரம்பித்துள்ளார். மீண்டும் ஈழத் தமிழர் பிரச்சினையையும் கையில் எடுத்துள்ளார்.
அதை விட முக்கியமாக ஆரம்பத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தற்போது ஜெயலலிதாவை நான் ஆதரிப்பதாக கூறவில்லை என்று கூறி விட்டார். இதையடுத்து சீமான் கை நழுவிப் போய் விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications