ஸ்ரீநகர் சென்ற ரயிலில் பயணித்த பாஜகவினரை தடுக்க முயற்சி-எதியூரப்பா புகார்
பெங்களூர்: ஸ்ரீநகரில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்தவற்காக கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற பாஜகவினரைத் தடுக்கும் நோக்கில் ரயிலை நிறுத்த ரயில்வே பாதுகாப்புப்ப படையினரும், போலீஸாரும் முயற்சித்ததாக கர்நாடக முதல்வர் எதியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்ரீநகரில் நடைபெறும் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கர்நாடக பாஜகவினர் கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்றனர். இந்த ரயில் மகாராஷ்டிர மாநிலம் அகமது நகருக்கு வந்தபோது 18 பெட்டிகள் நிறைய இருந்த பாஜகவினர் தொடர்ந்து செல்வதைத் தடுக்கும் வகையில் ரயிலை நிறுத்தி போக விடாமல் செய்துள்ளனர் பாதுகாப்புப் படையினர்.
இந்த செயல் கண்டனத்துக்குரியது. இதை நான் பிரதமரிடம் கொண்டு செல்லவுள்ளேன். இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கும் நான் கடிதம் எழுதவுள்ளேன் என்றார் எதியூரப்பா.












Click it and Unblock the Notifications