சென்னையில் புத்த மட தாக்குதலில் 4 பேர் காயம் : இலங்கை அரசு கண்டனம்
சென்னை : சென்னையில் உள்ள புத்த மடத்துக்குள் ஒரு மர்ம கும்பல் திடீர் எனப் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகிக்கப்படுகிறது.
இது குறி்த்து போலீசார் கூறுகையில், "நேற்று எழும்பூரில் உள்ள புத்த மடத்துக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அவர்கள் அங்குள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர்," என்றனர்.
கடந்த 22-ம் தேதி தமிழக மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இந்த தாக்குதல் நடந்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இலங்கை அரசு இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் உள்ள புத்தமட தாக்குதலுக்கு பின் வேறு சில காரணங்கள் உள்ளன. இது இலங்கையில் மத மோதல்கள் ஏற்படுத்தும் நோக்கோடு நடத்தப்பட்டுள்ளது. இதை நம்பி யாரும் அவர்கள் வீசிய வலையில் சிக்கிவிட வேண்டாம்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications