பட்ஜெட் கூட்டத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளுடன் பிரணாப் பேச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிப்ரவரி 8ம் தேதி எதிர்க்கட்சிகளுடன் பேசவுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கூட்டு நாடாளுமன்ற குழு (ஜேபிசி) விசாரணைக்கு விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதை முன்வைத்து குளிர்காலக் கூட்டத் தொடரை முற்றிலும் முடக்கி விட்டன.
தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரையும் நடத்த விட மாட்டோம் என்றும் அவை கூறியுள்ளன.
இதையடுத்து எதிர்க்கட்சிகளுடன் பேசி சுமூக நிலையை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்தப் பணியை பிரணாப் முகர்ஜியிடம் மத்திய அரசு கொடுத்துள்ளது.
இதையடுத்து பிப்ரவரி 8ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் பிரணாப் முகர்ஜி.












Click it and Unblock the Notifications