தாமஸ் நியமனம்-மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தை சம்பாதித்த மத்திய அரசு
டெல்லி: தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் பி.ஜே. தாமஸை நியமித்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு மீண்டும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக, கேரளாவில் பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் சிக்கி குற்றவாளிகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள தாமஸை நியமித்ததை ரத்து செய்யக் கோரி பொது நலன் மனுக்களுக்கான மையம் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்து மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி ஆஜராகி, பதவி நியமனத்தின்போது குற்றப்பத்திரிக்கை என்பது ஒரு தடையே அல்ல என்று தெரிவித்தார்.
இதைக் கேட்டு கோபமடைந்த தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச், தாமஸை நியமிப்பதற்கு முன்பு, அவருடைய சர்வீஸ் கோப்புகளை பரிசீலனை செய்தீர்களா என்று கேட்டனர். மேலும், தாமஸை, தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கலாம் என்று பரிந்துரை செய்த, முன்னாள் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் அனுப்பிய கோப்பை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டனர்.
அதற்குப் பதிலளித்த வாஹன்வதி, தலைமை கண்காணிப்பு ஆணையரை நியமிக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்ட பின்னர், அவர் மீதான வழக்குகள் குறித்து விசாரிக்க வேண்டியதில்லை என்று கூறினார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி கபாடியா, அப்படியானால், இது எல்லா நியமனங்களுக்கும் பொருந்துமா என்று கேட்டார். அதற்கு வாஹன்வதி, இது ஒரு குழப்பமான விஷயம் என்றார்.
அந்த சமயத்தில் குறுக்கிட்ட மனுதாரரின் வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன், தாமஸை நியமிப்பதற்கு முன்பு அவர் குறித்த கோப்புகளில், அவர் மீதான பாமாயில் ஊழல் குறித்த விவரங்கள் சேர்க்கப்படவில்லை. மேலும், தாமஸ் மீதான குற்றப்பத்திரிக்கையும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. கிட்டத்தட்ட இந்தத் தகவல்களை மறைத்துள்ளனர் என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications