செல்போன் பில் கிடைப்பதில் தாமதம்-பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அவதி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: செல்போன் பில்கள் தாமதமாக வருவதால் பிஎஸ்என்எல் போஸ்டு பெய்டு வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

செல்போன் சேவையில் பிஎஸ்என்எல் முக்கிய பங்காற்றி வருகிறது. எங்கு சென்றாலும் டவர் பிரச்சனை இருக்காது என்பதால் அரசு அலுவலர்கள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பினர் பிஎஸ்என்எல் செல்போனை உபயோகித்து வருகின்றனர்.

பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் போஸ்டு பெய்டு திட்டத்தி்ல் சேவை பெற்று வருகின்றனர். பிஎஸ்என்எல் போஸ்டு பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மாதந்தோறும் பில் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பில் கட்ட 16ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் விடுமுறை எனில் அதற்கு அடுத்த வேலைநாள் கடைசிநாளாகும்.

பிஎஸ்என்எல் போ்ஸ்டு பெய்டு வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் பில் டெலிவரி ஆவதில்லை என்ற புகார் எழுந்த வண்ணம் உள்ளது. பொதுவாக செல்போன் பில் 12தேதிக்கு மேல்தான் வருகிறது. இதனால் பில்லை பார்த்து பணம் செலுத்துவோர் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

போஸ்டு பெய்டு வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனிலேயே பில் கட்டணத்தை பார்த்து கொள்ளும் வசதியும் உள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் பில் கட்டணத்தை பார்த்து கொள்ளும் வசதியும் சில நேரங்களில் கிடைப்பதில்லை.

சிஸ்டத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் பின்னர் முயற்சி செய்யுங்கள் என்ற பதில்தான் கிடைக்கிறது. இம்மாதம் நேற்று வரை இதே பதில் நீடித்தது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சம்பளம் வாங்கியே உடனேயே செல்போன் கட்டணத்தை கட்ட விரும்புகின்றனர்.

செல்போன் பில் கட்டணத்தை பார்த்து கொள்ளும் வசதி சில நேரங்களில் கிடைக்காததால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அவதியுற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+