சத்தியமூர்த்தி பவன் மண் கூட வேண்டாம்.. உடைகளை உதறிவிட்டு போங்கள்-ஆதரவாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்

எனக்கு கிடைக்காதது வருத்தமில்லை..ஆனால்:
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த அமைக்கப்பட்ட குழுவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இடம் தரப்படாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் இன்று காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அப்போது சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த இளங்கோவன் தனது ஆதரவாளர்கள மத்தியில் பேசுகையில்,
தேழாமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் என்னை சேர்க்கவில்லை என்பதால் வருத்தமில்லை. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு அனைத்து விஷயங்களும் தெரியும். சட்டமன்ற உறுப்பினர் யசோதாவும் கட்சிக்காக பாடுபட்டவர். யசோதா எனக்கு ஆதரவு தருபவர் அல்ல. என்னை எத்தனையோ கூட்டங்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமைச்சராக இருக்கும்போது சிங்கமாக இருந்தார். இப்போது அசிங்கமாக இருக்கிறார் என்று யசோதா விமர்சித்துள்ளார். இருப்பினும் அவர்களையும் இந்தக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.
ஐவர் குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்பட அனைவரும் பிரபலமானவர்கள்தான். அவர்கள் ஐவர் குழுவில் இடம் பெற்றிருந்தது சந்தோஷம்தான். ஆனால் தமிழகத்தில் எந்த தொகுதியில் காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ளது. எந்த தொகுதியை பெறலாம் என்பதை தெரிந்தவர்களும் இடம்பெற வேண்டும்.
குலாம் நபி ஆசாத்திடம் நான் பேசும்பபோது, தொகுதி பங்கீட்டுக்கான குழு பற்றி முடிவு செய்யவில்லை என்றார். ஆனால் ஐவர் குழு அறிவித்தவுடன் என்னிடம் பேசிய அவர், உங்கள் பெயர் இடம் பெறவில்லை. இது மேலிட உத்தரவு என்கிறார்.
தங்கபாலு என்ற ஜந்து:
சோனியா காந்தி போன் செய்யும்போது தங்கபாலு பேசுவதே கிடையாது. தங்கபாலு போன்ற ஜந்து கட்சியில் இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு கேடு. சத்தியமூர்த்தி பவனில் இதுவரை இரவு நேரங்களில்தான் கூட்டம் சேர்ந்ததை பார்த்திருக்கிறார்கள். ஏன் என்றால் சத்தியமூர்த்தி பவனில் இரவு நேரங்களில் தங்கபாலு பூஜை போடுகிறார். ஆனால் இன்றுதான் பகலில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடுகிறது. இதைப் பார்த்தால் நான் கட்சியில் இருந்து வெளியேறி விடுவேனோ என்று பயந்து விடுவார்கள்.
திமுகவில் தொகுதி பங்கீட்டுக் குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் அனைவரும் ஜாம்பாவான்கள், திறமைசாலிகள். அமைச்சர் துரைமுருகனுக்கு தமிழகத்தில் எத்தனை ஆறுகள், குளங்கள், குட்டைகள் இருக்கின்றன என்பதெல்லாம் தெரியும். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் மக்களின் மனநிலை என்பது என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியும். திமுக குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு சமமாக காங்கிரஸ் குழுவில் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
உண்ணாவிரதத்தின்போது இங்கே நமது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முற்பட்டார். ஏன் தீக்குளிக்க வேண்டும். பிரச்சனை வந்தால் எதிர்த்து போராட வேண்டும். தீக்குளிப்பது கோழைத்தனம். முத்துக்குமார் தீக்குளித்து தியாகம் செய்தார் என்று சீமான், நெடுமாறன் போன்றவர்கள் பேசுகிறார்கள். ஏன் இப்படி பேசி பேசி மற்றவர்களை தீக்குளிக்க வைக்கிறீர்கள். அதை நீங்கள் செய்ய வேண்டியதுதானே. ஏன் செய்யவில்லை?. அதை சீமானும், நெடுமாறனும் செய்தால் தமிழ்நாடு நன்றாக இருக்கும்.
இங்கே கூடியிருக்கும் தொண்டர்கள் அனைவரும் எனக்காக அமைதியாக கலைந்து செல்ல வேண்டும். எந்த அசம்பாவிதத்திலும் ஈடுபடக்கூடாது. அனைவரும் தங்கள் உடைகளை உதறிவிட்டு போக வேண்டும். ஏனென்றால் சத்தியமூர்த்தி பவனில் இருந்து மண்ணைக்கூட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அவரது ஆதரவாளர்களும் எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று சொல்வார்கள் அதற்காகத் தான் என்றார்.
முதலில் திமுகவைத் தாக்கியவர் இப்போது காங்கிரஸ் தலைமையையே எதிர்த்து தனது ஆதரவாளர்களை போராட்டம் நடத்த வைத்துள்ளதன் மூலம் இளங்கோவனை அதிமுக தரப்பு தூண்டி விடுகிறதோ என்ற சந்தேகம் காங்கிரஸ் தலைமைக்கு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications