சாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கு: ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாராண்ட்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: சாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் ஆஜாராகாத இன்ஸ்பெக்டருக்கு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் பிடிவாராண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
பாளை விஎம் சத்திரத்தைச் சேர்ந்தவர் வக்கீல் சந்தானகுமார். அவர் கடந்த 2009-ம் ஆண்டு பாளை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நாகராஜன் தன்னை சாதியை சொல்லி திட்டியதாக நெல்லை வன்கொடுமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த 21-ம் தேதி ஆஜாராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் நேற்று வழக்கு விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்ஸ்பெக்டர் நாகராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது இன்ஸ்பெக்டர் நாகராஜன் ராமநாதபுரத்தில் பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications