தேர்தல்-வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு-ரூ. 1 லட்சம் எடுத்தால் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கிகளில் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் எடுப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு தேரத்ல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல ரூ. 2 லட்சம் பணம் எடுத்தால் அது பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டசபைத் தேர்தலையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளது தேர்தல் ஆணையம். பீகாரில் கடைப்பிடிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளை அப்படியே தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் கடைப்பிடிப்போம் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தற்போது அதை செயல்படுத்தத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.

அந்த வகையில் தற்போது புதிய உத்தரவு ஒன்றை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. அதன்படி, யாரேனும் தங்களது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் பணம் எடுத்தால் அதுகுறித்து வங்கிகள் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

ரூ. 2 லட்சம் பணம் எடுத்தால் அந்தப் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்து ஆய்வுக்கு உட்படுத்தும். அதில் சர்ச்சை எதுவும் இல்லாவிட்டால் பணம் திரும்ப கொடுக்கப்படும்.

3 நாட்களில் ரூ. 5 லட்சம் வரை ஒருவர் பணம் எடுத்தாலும் அதுவும் கண்காணிக்கப்படும், ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+