நெல்லையில் திமுக, காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
நெல்லை: மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக திமுக அறிவித்துள்ளதை காங்கிரஸாரும், திமுகவினரும் நெல்லையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதனால் இரு கட்சியினரிடையேயும் மனதளவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகள் தொகுதிகள் பங்கீட்டில் தீவிரம் காட்டி வரும் நிலையி்ல் ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரசும், திமுகவுக்கும் தொகுதி பங்கீ்ட்டில் பிரச்சனை நிலவி வந்தது.
இந்த நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நேற்று மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக திமுக உயர்நிலை குழு கூடி முடிவு செய்தது. திமுகவின் இந்த முடிவை அந்த கட்சியினர் வரவேற்றுள்ளனர். நெல்லையில் இரவு மாலை ராஜா எம்எல்ஏ தலைமையில் தொண்டர்கள் இனிப்பு கொடுத்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
அப்போது சிலர் காங்கிரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதே வேளையில் காங்கிரசாரும் திமுக விலகியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பட்டாசு வெடித்தனர். நெலலை சட்டமன்ற இளைஞர் காங்கரசார் துணை தலைவர் பிடி ஆனந்த் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications