மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை: தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படமாட்டாது என்று இன்று மாநில அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் அதை திரும்பப் பெறுமாறு தமிழக அரசு வலியுறுத்தியது.
இது குறித்து மாநில சுகாதாரத் துறை தலைமை செயலர் வி. கே. சுப்புராஜ் கூறியதாவது,
மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை திரும்பப்பெறுமாறு மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மாநில அரசின் கொள்கைப்படி இந்த ஆண்டில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை +2 மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெறுமே தவிர நுழைவுத் தேர்வு நடத்தப்படமாட்டாது.
மருத்துவப் படிப்புகளுக்கான பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே பிரதமர் மன்மோகனிடம் கேட்டுக் கொண்டார் என்றார்.












Click it and Unblock the Notifications