டி.ஆர்.எஸ். பாணியில் சுயேச்சைகளை களமிறக்க அதிமுக திட்டம்
சென்னை: ஆந்திராவில், தெலுங்கானா பகுதியில் நடந்த இடைத் தேர்தலின்போது பெருமளவில் சுயேச்சைகளை தாங்களே களம் இறக்கி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்குப் பதில் வாக்குச்சீட்டு முறையை உருவாக்கிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போல இங்கும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர அதிமுக ரகசியத் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது.
தெலுங்கானா பகுதியில் சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்த விடாமல் தடுப்பதற்காக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஒரு தந்திரத்தை கையாண்டது. அதன்படி அவர்களே, ஏராளமான பேரை சுயேச்சை வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தனர். இந்த நூதன டெக்னிக்கால் மிரண்டு போனது தேர்தல் ஆணையம்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் இந்த திட்டத்திற்கு பாதி வெற்றி கிடைத்தது. சில தொகுதிகளில் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டது.
தற்போது இதே டெக்னிக்கை தமிழகத்திலும் அமல்படுத்த அதிமுக தரப்பு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. 234 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் சுயேச்சைகளை களம் இறக்கி, அதாவது குறைந்தது 60 பேரை களம் இறக்கி அதன் மூலம் அனைத்து தொகுதிகளிலும் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த அதிமுக தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதிமுக தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதிமுக மட்டுமல்லாமல், பாமக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மின்னணு வாக்குப் பதிவு முறையில், பெரும் மோசடிகள் நடப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் குற்றச்சாட்டாகும். இதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இந்த பின்னணியில்தான் வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் மாறுவதற்காக இப்படி ஒரு நூதன திட்டத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கையாண்டு பாதி வெற்றியும் பெற்றது. தற்போது அதே பார்முலாவை தமிழகத்திலும் அமல்படுத்த அதிமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இதனால் அதிமுகவுக்கு எந்த லாபமும் கிடைக்காது என்று அதிமுக தரப்பிலேயே அவநம்பிக்கையுடன் கூறுகின்றனராம்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications