நாடார்களுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க காங்.குக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி கோரிக்கை!
சென்னை: நாடார்களுக்கு சென்னையிலும், கொங்கு மண்டலத்திலும் தலா 2 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி ஒதுக்க வேண்டும் என்று திமுகவில் போய்ச் சேர்ந்துள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு நாடார் சமுதாய அமைப்புகள் இணைந்து பெருந்தலைவர் மக்கள் கட்சியை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் தலைவராக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அடுத்த 2 நாட்களிலேயே அதிமுகவை நாடி அங்கு போய் 2 சீட்களைப் பெற்று விட்டார் சரத்குமார்.
அதிர்ச்சி அடைந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி, சரத்குமாரை பதவியிலிருந்து நீக்கியது. இனி வேறு வழியில்லை என்ற நிலை உருவானதால் திமுகவை நாடி அங்கு கூட்டணி வைத்து, ஒரு சீட் வாங்கியுள்ளனர். அந்த சீட்டில், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலனே போட்டியிடவுள்ளார். இதை அவரே நேற்று அறிவித்தார்.
திமுகவுடன் கூட்டணி வைத்து ஒரு சீட்டை வாங்கிய பின்னர் வெளியே வந்த தனபாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
3500 நாடார் சங்கங்கள் மற்றும் மிக முக்கிய சங்கங்களான மதுரை நாடார் மகாஜன சங்கம், நெல்லை தட்சிணமாற நாடார் சங்கம், நெல்லை- தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து உருவாக்கப்பட்டதுதான் பெருந்தலைவர் மக்கள் கட்சி.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் நாடார், சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாங்கள் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரம் செய்வோம்.
6-வது முறையாக முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் முதல்வராக ஆவார். எங்கள் கட்சியின் சார்பாக நான் போட்டியிடுகிறேன். தொகுதி பின்னர் அறிவிக்கப்படும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவேன்.
கொங்குமண்டலம், மற்றும் சென்னையில் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்த நாடார்களுக்கு தலா 2 தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்றார் தனபாலன்.
-
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு!












Click it and Unblock the Notifications