வாரன் பஃபே வருகையால் 218 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
மும்பை: ஐசிஐசிஐ, இன்போஸிஸ், ரிலையன்ஸ் போன்ற ப்ளூ சிப் பங்குகளின் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்ததால், சென்செக்ஸில் இன்று 218 புள்ளிகள் ஏற்றம் காணப்பட்டது.
இந்திய பங்குச் சந்தை மற்றும் தொழில் துறை பற்றி, பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபே கொடுத்த சாதகமான கருத்து காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் அதிக ஆர்வம் காட்டியதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும், 2 லட்சம் மெட்ரிக் டன் அளவு சர்க்கரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் சர்க்கரை உற்பத்தி நிறுவனப் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.
நேற்று 149 புள்ளிகள் உயர்ந்த நிலையில் முடிவுற்ற சென்செக்ஸ், இன்றைய வர்த்தகத்தில் 218 புள்ளிகள் உயர்ந்ததால் மீண்டும் 18000 என்ற இலக்கைக் கடந்து 18,206 ஆக முடிந்தது.
நிப்டியில் 66 புள்ளிகள் உயர்ந்து 5,480.25 ஆக நிலைப்பெற்றது.












Click it and Unblock the Notifications