சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்தார் அன்னா ஹஸாரே!

லோக்பால் மசோதா தொடர்பாக கூட்டு வரைவுக் குழுவின் உறுப்பினர்களாக அரசு அதிகாரிகள் மட்டுமே இருப்பர் என்றும் அமைச்சர்கள் யாரும் அதில் இடம்பெற மாட்டார்கள் என்றும் மத்திய அமைச்சர் கபில்சிபல் தெரிவித்தார்.
கூட்டு வரைவுக் கமிட்டி அமைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவது சாத்தியமில்லை. எனினும் சட்ட அமைச்சகம் மூலமாக அதிகாரப்பூர்வ கடிதம் அளிக்க தயாராக இருக்கிறோம் என கபில்சிபல் தெரிவித்தார்.
அரசின் இந்த முடிவு காரணமாக ஏப்ரல் 13-ம் தேதி நாடு முழுவதும் சிறைநிரப்பும் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்தார்.
அரசுக்கு எதிரான சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்று அரசுக்கு பொதுமக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என ஹசாரே குறிப்பிட்டார்.
முன்னதாக ஏப்ரல் 12-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என ஹசாரே அறிவித்தார். ஆனால் ஏப்ரல் 12-ம் தேதி விடுமுறை தினம் என்பதால் 13-ம் தேதிக்கு அந்த போராட்டத்தை மாற்றினார்.












Click it and Unblock the Notifications