கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்-டாக்டர் கிருஷ்ணசாமி
Subscribe to Oneindia Tamil

போடி சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை ஆதரித்து அவர் அரண்மனைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மின்தடையினால் விவசாயிகளும், நெசவாளர்களும் மட்டுமல்லாது சாமானிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலை வாசி உயர்வு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. குடும்ப ஆட்சி நடைபெறுவதால் ஏழைகளின் வாழ்வு உயர வழியில்லை.
7 கோடி மக்களின் வாழ்க்கை செழித்திட உங்களின் வாக்குகளை அதிமுகவிற்கு பதிவு செய்ய வேண்டும்.
ஜெயலலிதா முதலமைச்சர் ஆனால் மட்டுமே இலவச திட்டங்களை நேரடியாக கேட்டுப் பெற முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications