தமிழகத்தை சுற்றி முடித்த விஜயகாந்த் ரிஷிவந்தியத்தில் 4 நாள் தீவிரப் பிரசாரம்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு தனது தொகுதியான ரிஷிவந்தியத்தில் பிரசாரம் செய்கிறார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அவர் பேசும் இடமெல்லாம் புதுப் புது சர்ச்சைகள் கிளம்பின. தற்போது தனது தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். ரிஷிவந்தியத்தில் விஜயகாந்தை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவராஜ் போட்டியிடுகிறார்.
கடந்த மாதம் 24-ம் தேதி முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பரிசாரம் செய்து வருகிறார். ரிஷிவந்தியத்தில் கடந்த 24-ம் தேதி மட்டும் தான் பிரசாரம் செய்தார்.
அவருக்கு ஆதரவாக தேமுதிக இளைஞர் அணி செயலர் சுதீஷ், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் ரிஷிவந்தியத்தில் 3 நாள் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை தனக்கு வாக்கு சேகரிக்கவிருக்கிறார்.
விஜயகாந்தை தோற்கடிக்க திமுக கூட்டணி வகுத்துள்ள வியூகத்தை உடைக்க திட்டமிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் பெரிய டெம்போ டிராவலர் வாகனத்தில் பிரசாரம் செய்த அவர் ரிஷிவந்தியத்தில் தெருத் தெருவாக அலைவதற்காக சிறிய ஜீப்பில் செல்கிறாராம்.












Click it and Unblock the Notifications