பூத் சிலிப்புகளை எடைக்கு போட்ட அங்கன் வாடி ஊழியர் சஸ்பெண்ட்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் பூத் சிலிப்புகளை மளிகை கடையில் எடைக்கு போட்ட அங்கன் வாடி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் பூத் சிலிப் வழங்கி வந்தன. இம்முறை தேர்தல் ஆணையமே வழங்குகிறது. இதற்கென்று அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சங்கரன்கோவில்லி பூத் சிலிப்புகள் வழங்க 34 அங்கன் வாடி ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதில் திருநீலகண்ட ஊரணி அருகில் உள்ள சத்துணவு கூடத்தில் சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமியிடம் வாக்காளர்களிடம் கொடுக்கச் சொல்லி பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டன. அவர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பதில் நேராக மளிகை கடைக்கு சென்று எடைக்குப்போட்டுள்ளார்.
இது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து முதன்மை உதவி தேர்தல் அதிகாரி சந்திரசேகரன், உதவி தேர்தல் அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் சம்மந்தப்பட்ட மளிகை கடைக்குச் சென்று பூத் சிலிப்புகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications