Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிகவினர் மீது திமுகவினர் தாக்குதல்: 'கைகட்டி நிற்கும் காவல் துறை'- விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரை திமுகவினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இப்பொழுதாவது சட்டப்படி செயல்பட காவல்துறைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும் இன்றைய காவல்துறை ஏன் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது என்பது எனக்குப் புரியவில்லை என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னரும் நமது கூட்டணிக் கட்சியினரை தொடர்ந்து திமுகவினர் தாக்கி வருகிறார்கள். குறிப்பாக பல இடங்களில் தே.மு.தி.கவைச் சேர்ந்த இளைஞர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு, ஜெயபால், அவரது மனைவி பிரசன்ன குமாரி, தம்பி சுகந்தராஜ் ஆகியோர் தி.முகவைச் சேர்ந்தவர்களால் அரிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரத் தாக்குதலில் ஜெயபால் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். வேடசந்தூர் தொகுதியில் உள்ள சேவுகவுண்டச்சிபட்டியில் தே.மு.தி.கவினரை தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த வன்முறையாளர்கள் தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சோழிங்கநல்லூர் தொகுதியில் நன்மங்கலம் பகுதியில் தே.மு.தி.க. கிளைச் செயலாளர் வசந்தவேலு வீட்டை தாக்கியதோடு மட்டுமல்லாமல், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் தே.மு.தி.க. நெசவாளர் அணி செயலாளராக செயல்பட்டு வந்த அசோகன் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும், அவரது இரண்டு பிள்ளைகளுக்கு படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளேன்.

காரைக்கால் தெற்கு தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட அசனா சொந்த வீட்டிலிருந்த போது தி.மு.கவைச் சேர்ந்த கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட தோழர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், தாக்கியவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்து வழக்கு தொடுக்கவும், மேற்கொண்டும் கொலை வெறித்தாண்டவம் நடைபெறாமல் இருக்க தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் பாதுகாப்பு கேட்டால் உடனடியாக பாதுகாப்பு அளிக்கவும் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இன்றைய காவல்துறை ஏன் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இப்பொழுதாவது சட்டப்படி செயல்பட காவல்துறைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆகவே தயவு தாட்சண்யமின்றி மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தேர்தல் கமிஷனும் முறையே ஆணைகளை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+