உதவியாளர் கொலை வழக்கு: தேவைப்பட்டால் ராதிகா செல்வியிடம் விசாரணை!
நெல்லை: முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் உதவியாளர் பாபுராஜ் கொல்லப்பட்ட வழக்கில் தேவைப்பட்டால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களைத் தடுக்கவும், கொள்ளையர்களை பிடிக்கவும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் தொடர் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ள திசையன்விளை அருகேயுள்ள மணலிவிளையைச் சேர்ந்த ஜெபமணி சாமுவேலும், அவரது மகன் எசேக்கியலும் (24) கைது சொய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 212 கிராம் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி நகைகள் மீட்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3லட்சத்து 21 ஆயிரம் ஆகும்.
இது தவிர தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சீகம்பட்டியில் என்ஜினியர் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.
அதே போல நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள சீவலார்குளத்தில் உள்ள அமைச்சர் பூங்கோதை குடும்பத்தினருக்கு சொந்தமான ஆலடி அருணா நர்சிங் கல்லூரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் உதவியாளர் பாபுராஜ் கொலை வழக்கில் சம்பந்தபட்டுள்ள 6 நபர்களை கைது செய்துள்ளோம்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேவைப்பட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியிடம் விசாரணை நடத்தப்படும்," என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications