தீ விபத்து: சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு
சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் இருந்து தினமும் 10.50 லட்சம் லிட்டர் அளவுக்கு பால் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் வியாழக்கிழமை அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில், பால் பண்ணையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பால் பவுடர், நெய், பேக்கிங் செய்ய பயன்படுமம் பாலித்தீன் பிலிம் பண்டல்கள் எரிந்து போயின. ரூ. 2.50 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து 21ம் தேதி முதல் சோழிங்கநல்லூர் பண்ணையில் இருந்து பால் விநியோகம் நிறுத்தி வைக்கபப்பட்டது. இதனால் தாம்பரம், ஆதம்பாக்கம், கிண்டி, மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் விநியோகம் கடந்த 2 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications