தடையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட டிவி மீது நடவடிக்கை-தேர்தல் ஆணையம்
சென்னை: தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட டிவி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த டிவிக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது.
மே 10ம் தேதி மாலை வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை எந்த ரூபத்திலும் வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இருப்பினும் கடந்த 28ம் தேதியன்று தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்துக் கணிப்பு ஒன்றை வெளிட்டது. அதில் தமிழகத்தில் லேசான மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் மாநிலத்திற்கும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து நடத்தை விதிமுறையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட அந்த டிவியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.
மதுரையில் பிரவீண்குமார்:
இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் அலுவலர்களுக்கு ஐந்து மண்டலத்தில் நேரடியாக சென்று பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த பயிற்சி வகுப்பு நடத்துவதற்காக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் இன்று காலை மதுரை வந்தனர்.
அவர்கள் மதுரை மாவட்டத்தின் 7 சட்டசபை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள மதுரை மருத்துவ கல்லூரிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
பின்பு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வாக்கு எண்ணிக்கை குறித்து பயிற்சி அளித்தார்.
அப்போது, மதுரை மத்திய தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் டப்ளை செய்தது தொர்பாக குறித்த புகாரின் பேரில் மீண்டும் தேர்தல் நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் சகாயத்துடன் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications