தடையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட டிவி மீது நடவடிக்கை-தேர்தல் ஆணையம்
சென்னை: தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட டிவி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த டிவிக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது.
மே 10ம் தேதி மாலை வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை எந்த ரூபத்திலும் வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இருப்பினும் கடந்த 28ம் தேதியன்று தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்துக் கணிப்பு ஒன்றை வெளிட்டது. அதில் தமிழகத்தில் லேசான மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் மாநிலத்திற்கும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து நடத்தை விதிமுறையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட அந்த டிவியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.
மதுரையில் பிரவீண்குமார்:
இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் அலுவலர்களுக்கு ஐந்து மண்டலத்தில் நேரடியாக சென்று பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த பயிற்சி வகுப்பு நடத்துவதற்காக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் இன்று காலை மதுரை வந்தனர்.
அவர்கள் மதுரை மாவட்டத்தின் 7 சட்டசபை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள மதுரை மருத்துவ கல்லூரிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
பின்பு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வாக்கு எண்ணிக்கை குறித்து பயிற்சி அளித்தார்.
அப்போது, மதுரை மத்திய தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் டப்ளை செய்தது தொர்பாக குறித்த புகாரின் பேரில் மீண்டும் தேர்தல் நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் சகாயத்துடன் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications