ஜார்க்கண்ட்-மாவோயிஸ்ட் நக்டலைட் தாக்குதலில் 11 ஜவான்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: மாவோயிஸ்ட்கள் நடத்திய திடீர் தாக்குதலில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 சிஆர்பிஎப் வீரர்கள் உள்பட 11 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

லோஹர்தாகா மாவட்டம், தர்தாரியா கிராமத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

சிஆர்பிஎப் வீரர்கள் தவிர 3 உள்ளூர் போலீஸாரும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர். மொத்தம் 11 பேர் பலியாகியுள்ளதாக கடைசியாக கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. சிஆர்பிஎப் வீரர்கள் சிலர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர்களை நிலக்கண்ணிவெடி மூலம் நக்சலைட்கள் தாக்கினர்.

அதன் பின்னர் மறைவிடங்களிலிருந்து போலீஸாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நக்சலைட்கள் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல் இல்லை. சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸார் விரைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+