இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 3 கோடி பரிசுத் தொகையை வழங்கினார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பரிசுத் தொகையை அறிவித்தன.
அதன்படி தமிழக அரசும் இந்திய அணிக்கு ரூ. 3 கோடியும், தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ. 1 கோடியும் பரிசாக அளிப்பதாக அறிவித்தது.
இந்த நிலையில் இந்த பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இந்திய கேப்டன் டோணி, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன், சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது இந்திய அணிக்கான பரிசுத் தொகைக்கான காசோலையை டோணி மற்றும் சீனிவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்திய அணியினருக்கு தலா ரூ. 21.42 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.
அதேபோல ரூ. 1 கோடிக்கான காசோலையை அஸ்வின் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications