இன்று டெல்லியில் இலங்கை மீதான ஐ.நா. அறிக்கை மீதான கருத்தரங்கு
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இலங்கை அரசின் போர் குற்றம் தொடர்பான ஐ.நா. அறிக்கை மீதான கருத்தரங்கு கூட்டம் உச்ச நீதிமன்றம் எதிரில் உள்ள கிருட்டின மேனன் பவனில் இன்று நடைபெறுகிறது.
நீதிபதி சச்சார், சுரேஷ், அஜித்சிங் பெயின்ஸ், பேராசிரியர். ஜக்மோஹன் சிங், கிலானி, பேராசிரியர். மணிவண்ணன், எழுத்தாளர் அருந்ததிராய், சத்யா சிவராமன் ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டம் மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
பின்பு பிரபல அரசியல்வாதிகள் லாலுபிரசாத், ராம்விலாஸ் பாஸ்வான், டி. ராசா, சுவபன் முகர்ஜி, நீரஜ் சேகர், அம்பேத் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் கருத்தரங்கு மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கு டெல்லி தமிழ் மாணவர்களால் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications