தலித் மக்களின் நடைபாதையை மறித்து தீண்டாமைச் சுவர்: சிபிஎம் கடும் கண்டனம்
விருதுநகர்: விருதுநகர் அருகே உள்ள வ.புதுப்பட்டியில் தலித் மக்கள் நடைபாதையை மறித்து சுவர் கட்டப்பட்டுள்ளதற்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், வ.புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது சாலியர் தொடக்கப்பள்ளி. இப்பள்ளிக்கு மேல்புறம் தலித் மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களும், பிற சமூகத்தினரும் பள்ளிக்கு செல்வதற்கும், காட்டு வேலைகளுக்கு செல்வதற்கும் பாதை இருந்தது. சுமார் 100 ஆண்டுகளாக இதே பாதையைத்தான் அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.
முன்னதாக பள்ளிச் சுற்றுச் சுவர் கட்டும்போது நடைபாதையை விட்டுவிட்டு கட்டியுள்ளனர். இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி நிர்வாகம், அரசு அதிகாரிகளின் துணையோடு இந்த பாதையை பள்ளியின் பெயரில் பட்டா பெற்றுள்ளது.
பின்பு, நடை பாதையை மறித்து சுவர் எழுப்ப பலமுறை முயற்சி செய்துள்ளனர். தலித் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் சுவர் கட்டவில்லை என்று கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுவர் கட்டக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் கடந்த 19-ம் தேதி அன்று ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர் காவல்துறை துணையோடு நடைபாதையை மறித்து சுவரை கட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு அப்பகுதி தலித் மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறை அவர்களை கடுமையாக மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
போலீசாரின் இந்த செயலுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் எஸ். ஞானகுரு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொது நடை பாதையில் கட்டப்பட்டு வரும் தீண்டாமைச் சுவரை உடனடியாக மாவட்ட நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த இடத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், தீண்டாமை கொடுமைக்கு துணை போவோர் மீது அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications