கனிமொழிக்கு அனுதாபம் தேட காங். முயற்சி: பாஜக
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள கனிமொழி உள்ளிட்டோருக்கு அனுதாபம் தேடும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி நிருபர்களிடம் கூறுகையில், 2ஜி ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் கனிமொழியை கருணாநிதி சந்தித்ததை உருக்கமாக உருவகப்படுத்துகின்றனர்.
மேலும் கனிமொழி பெண் என்பதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலை கொண்டுள்ளார் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கூறுகிறார்.
கருணாநிதியை மத்திய அமைச்சர்களும் காங்கிரஸ் தலைவர்களும் சந்திப்பதும் கனிமொழிக்காக பரிந்து பேசுவதுமாக உள்ளனர்.
இதன் மூலம் இந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் மேல் அனுதாபம் உண்டாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மேலும் அவர்களை காப்பாற்றவும் காங்கிரஸ் முயற்சிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார் ரூடி.












Click it and Unblock the Notifications