அதிமுக அரசு நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கிறது-விஜயகாந்த்
சென்னை: தமிழக வளர்ச்சிக்கு அடிகோலும் வகையிலான அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளதாக எதிர்கக்ட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரை குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கூறுகையில்,
கவர்னர் உரையில் பல்வேறு நல்ல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆட்சியில் சட்டவிரோதமான முறையில் வலுக்கட்டாயமாக பயமுறுத்தி பலருடைய சொத்துக்கள் பறிக்கப்பட்டதை மீட்டு உரிய நபர்களுக்கு மீண்டும் வழங்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை தே.மு.தி.க. வரவேற்கிறது.
கேபிள் டி.வி.யை அரசுடமையாக்கும் அறிவிப்பும் வரவேற்கதக்கது. இதேபோல் பல அறிவிப்புகள் மக்களுக்கு பயனுள்ளதா அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது.
கவர்னர் உரையின் அறிவிப்புகள் நோய் தீர்க்கும் மருந்தாக அமைந்துள்ளது. இலவச அரிசி, மாணவ- மாணவிகளுக்கு லேப்-டாப் உள்பட பல்வேறு அறிவிப்புகளால் தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் இந்த அரசு நேர்கோட்டில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை காண முடிகிறது.
ஆளுநர் உரையில் உள்ள அறிவிப்புகள் தமிழக வளர்ச்சிக்கு வழிகோலும். முதியோருக்கு வங்கிகளில் ஓய்வூதியம் திட்டத்தை வரவேற்கிறேன். பிற திட்டங்களும் வரவேற்புக்குரியவை என்றார்.












Click it and Unblock the Notifications