கிரைண்டர் கல்லால் தாக்கி மனைவி கொலை: கணவன் வெறிச்செயல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கிரைண்டர் கல்லால் தாக்கி மனைவியைக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள செட்டியூரணி பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா. இவரது கணவர் சுப்பையா. ஆட்டோ டிரைவர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பரமசிவம், செல்வம் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
சுப்பையாவுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. அதனாலேயே கடனில் மூழ்கியுள்ளார். ஆகவே தனது ஆட்டோவை விற்று விட்டு தற்போது கூலி வேலைக்கு சென்று வருகிறார். இருந்தபோதும் குடி பழக்கத்தை மட்டும் அவர் விடவில்லை. பிரேமாவுக்கு பூர்விக சொத்து உள்ளது. அவற்றை விற்று கடனை அடைப்பதற்காக தனது பெயருக்கு அந்த சொத்துகளை எழுதி வைக்குமாறு மனைவியிடம் சுப்பையா கேட்டு வந்தார்.
ஆனால் பிரேமாவோ சொத்தை எழுதித் தர மறுத்துவிட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சுப்பையா தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலை மற்றும் நெஞ்சில் கிரைண்டர் கல்லால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பிரேமா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதை தொடர்ந்து சுப்பையா தட்டம்பாறை காவல் நிலையத்துக்கு சென்று நடந்ததைக் கூறி சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்பு சம்பவ இடத்துக்கு வந்து பிரேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்து தகராறில் மனைவியை கணவரே கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications