ஜெயலலிதாவுக்கு ஆஸ்திரேலியா தமிழ் சங்கம் பாராட்டு
சென்னை: இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீரமானம் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி விக்டர் ராஜ குலேந்திரன் முதல்வர்ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
பிற நாடுகளுடன் சேர்ந்து இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் இந்திய அரசுக்கு தமிழக மக்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளதற்காக எங்கள் சம்மேளனம் சிரம் தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
தாங்கள் கொண்டுவந்துள்ள தீர்மானம் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் அளிக்கிறது. தமிழினத்திற்காக தாங்கள் இந்திய அரசிற்கு விடுத்திருக்கும் அதிகாரபூர்வமான, ராஜதந்திர ரீதியான, நியாயமான இந்த அழுத்தத்தை தளர விடாது, தொடர்ந்து இந்திய அரசிற்கு வழங்கி, ஈழத்தமிழ் மக்களின் நியாயமான சுதந்திரமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய முன் வந்துழைப்பீர்கள் என்ற அசையாத நம்பிக்கையுடன், மீண்டும் எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications