கடையம் அருகே அம்பேத்கார் படம் அவமதிப்பு- 3 பேருக்கு வலைவீச்சு
கடையம்: நெல்லை மாவட்டம் கடையம் அருகே அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கடையம் அருகே உள்ள கீழகுத்துபாஞ்சான் பகுதியில் 2 பிரிவு மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு பிரிவினர் வாழும் பகுதியில் உள்ள தெரு தொடக்கத்தில் உள்ள சுவற்றில் சுதந்திர போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கம், அம்பேத்கார் மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோரின் படம் வரைந்து வைக்கப்பட்டிருந்தது.
நேற்று நள்ளிரவு இந்த பகுதிக்கு வந்த மர்ம வாலிபர்கள் சிலர் அந்த படத்தின் மீது கழிவு பொருட்களையும், குவாட்டர் பாட்டில்களையும் வீசி அவமரியாதை செய்து விட்டு ஓடிவிட்டனர். இன்று காலை இந்த அவச்செயலை பார்த்த அந்தபகுதி மக்கள் ஒன்று திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு கடையம் போலீசார் சென்று அமைதிப்படுத்தினர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அருகில் உள்ள தாழையூத்து கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் குடிபோதையில் மேற்கண்ட வன்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications