கேஸ் - டீஸல் விலை உயர்வக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம்! - பாஜக

இந்த விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை திடீரென்று உயர்த்தப்பட்டது.
இதைக் கண்டித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "கடந்த ஓராண்டில் பெட்ரோலிய பொருள்களின் விலை 10 முறை உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மக்கள்தான் இதனால் பாதிக்கப்படுகின்றனர். உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமல், பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியது மனிதாபிமானமற்ற செயல்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்குத் துணிவிருந்தால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டும்," என்றார்.
நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி முடிவு செய்துள்ளதாக பாஜகவின் துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
கட்சித் தலைவர் நிதின் கட்காரியும் இதனை பின்னர் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications