தனியாரிடம் 900 மெவா மின்சாரம் வாங்கும் தமிழக அரசு!
சென்னை: தமிழகத்தின் மின் தேவையைக் கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
தமிழ்நாட்டின் மின்சார தேவை 12 ஆயிரம் மெகாவாட். ஆனால் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகிறது. 5 ஆயிரம் மெகாவாட் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பற்றாக்குறையை குறைக்க வெளி மாநிலங்களில் இருந்து 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. அப்படியும் 3 ஆயிரம் மெகாவாட் மின்சார பற்றாக்குறை இருந்து வருகிறது. இதை சமாளிக்க நாள்தோறும் 2 மணி நேர மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் தனியாரிடம் இருந்து மின்சாரத்தை பெற, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து 5 ஆண்டுகளுக்கு 400 மெகாவாட் மின்சாரம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் டெண்டர் விட்டுள்ளது. 2011 டிசம்பர் 10-ந் தேதி முதல், 2016 டிசம்பர் 9-ந் தேதி வரை மின்சாரம் வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 400 மெகாவாட் மின்சாரத்தைப் பெற்று சப்ளை செய்ய தொடங்கிய உடனேயே தனியார் நிறுவனங்களிடம் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கான, மற்றொரு டெண்டர் வெளியிடப்படும்.
வள்ளூரில் தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் உற்பத்தி கழகமும் இணைந்து மேற்கொண்டு வரும், 500 மெகாவாட் மின் உற்பத்தி பிரிவு, கிட்டத்தட்ட சோதனை இயக்க அளவில் தயாராகி விட்டது. இந்த திட்டம் முழு அளவில் முடிக்கப்பட்டு விட்டால், மின் பற்றாக்குறை பெருமளவில் குறைந்து விடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications