தனியார் பஸ்களில் ரூ 100 வரை கட்டண உயர்வு
சென்னை: டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் தனியார் பஸ்களில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பல்வேறு புகார்களை முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்ட அனைவருக்கும் அனுப்பியும் அரசு இதை கண்டுகொள்ளவே இல்லை என புகார் எழுந்துள்ளது.
கடந்த ஜூன் 24-ல் டீசல் விலை உயர்வு, 30-ம் தேதி கமிஷன் உயர்வு ஆகியவற்றை அடுத்து டீசல் விலை லிட்டருக்கு ரூ.40.86 ஆக உயர்ந்துள்ளது. இதனால் லாரிகளில் வாடகை உயர்ந்துவிட்டது.
பஸ்களைப் பொருத்தவரை அரசு அறிவித்தால்தான் கட்டணத்தை உயர்த்த முடியும் என்ற நிலை இதுவரை இருந்து வந்தது.
ஆனால் சமீப காலமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் அந்தந்தப் பகுதியில் முடிவு செய்து கட்டணத்தை ரூ.1 முதல் ரூ.2 வரை உயர்த்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் இதுபோல தனியார் பஸ்களில் கட்டண உயர்வு இருந்தது.
அவ்வாறு வசூலிக்கக் கூடாது என்றும், வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட கட்டணம் குறையவே இல்லை.
எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பலரும் பஸ் உரிமையாளர்களாக இருப்பதால்தான் இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஆம்னி பஸ்களில் ரூ 100 வரை உயர்வு
இப்போது டீசல் விலை உயர்வை அடுத்து நீண்டதூரம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே ரயிலில் ஏ.சி. பயணத்தைவிட அதிகமாக சில ஆம்னி பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது அது மேலும் அதிகரித்துவிட்டது.
இப்போது காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்ந்துள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications