இலங்கையின் போர்க்குற்றத்தை ஐ.நா. முழுமையாக விசாரிக்க வேண்டும்-வரவர ராவ் கோரிக்கை

ஈழத் தமிழர்கள் சிந்திய ரத்தக் கண்ணீருக்கு பதில் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தமிழ் உலகையும் தாண்டி பிற மொழியினரிடமிருந்தும் எழத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில், இலங்கைக்கு எதிராக மிகப் பெரிய அளவிலான குமுறல் வெடித்துக் கிளம்பியுள்ளது. சர்வதேச மனித உரிமை ஆணையமும் இலங்கைக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நக்சல் இயக்க ஆதரவாளரும், புரட்சிகர எழுத்தாளருமான ஆந்திராவைச் சேர்ந்த வரவர ராவ் இலங்கையின் போர்க்குற்றத்தைக் கடுமையாக கண்டித்துள்ளார்.
நெல்லூரில் நடந்த புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரவர ராவ் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஐநா.வும், சர்வதேச சமுதாயமும் இணைந்து இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணையை நடத்த வேண்டும்.
இலங்கை அரசின் உத்தரவின் பேரில், அதன் திட்டத்தின் பேரில்தான் இலங்கை ராணுவம் அப்பாவி மக்களுக்கு எதிராக பல்வேறு அக்கிரமக் கொடுமைகளில் ஈடுபட்டது. இதை ஐ.நா. விசாரணை மூலம்தான் உலகுக்கு அம்பலப்படுத்த முடியும்.
மீடியாக்களையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும் போர் பாதித்த பகுதிகளுக்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை ஐ.நா. சபையும், சர்வதேச சமுதாயமும் எடுக்க வேண்டும்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்த ராணுவ அடக்குமுறைகள், போர்க்குற்ற மனித உரிமை மீறல்கள் முழுமையாக அம்பலத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
2004ம் ஆண்டு மத்தியில் பதவிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அன்று முதல் போர் முடிந்த காலகட்டம் வரை இலங்கைக்கு செய்த ராணுவ உதவிகள் உள்ளிட்ட பிற உதவிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இலங்கை குறித்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்ன என்பதையும் இந்திய அரசு வெளிப்படையாக அறிவித்தாக வேண்டும்.
சட்டிஸ்கரில் இன்று ராணுவத்தைக் குவித்து வைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டிருப்போர் அப்பாவி மக்கள்தான். எனவே ராணுவத்தை உடனடியாக அங்கிருந்து வாபஸ் பெற வேண்டும். மேலும் ஜார்க்கண்ட்டில் ராஞ்சி உயர்நீதிமன்றத்தால் ஐந்து ஆதிவாசிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்க வேண்டும் என்றார் ராவ்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications