கேரள முதல்வர் மருத்துவமனையில் அனுமதி: அரசாங்க அலுவல்கள் ரத்து
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி காய்ச்சல் காரணமாக கடந்த 7-ம் தேதி இரவு 11 மணி அளவில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்களில் கண்காணிப்பில் இருந்தார். ஆனால் சட்டசபை பணிகள் காரணமாக 8-ம் தேதி காலை 8 மணிக்கு டிஸ்சார்ஜ் ஆனார்.
ஆனால் 2 மணி நேரம் கழித்து 10 மணி அளவில் மீண்டும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள விஐபில் அறையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குறைந்தது 3 முதல் 4 நாட்களுக்கு முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து இன்று(10-ம் தேதி) வரை உள்ள அனைத்து அலுவல்களும் ரத்து செய்யப்பட்டன. அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications