தமிழக ஆளுநர் யார்? அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, மத்திய பிரதேச ஆளுநர் ராமேஸ்வர் தாகூர், கோவா ஆளுநர் எஸ்.எஸ்.சித்து ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. எனவே, இந்த 3 மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இது தவிர வேறு சில மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகையில் 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிப்பது குறித்தும் விவாதித்துள்ளார். இன்று அமைச்சரவை மாற்றம் முடிந்து விட்டது. எனவே அடுத்து ஆளுநர்கள் நியமனம் மற்றும் மாற்றம் நடைபெறவுள்ளது.
6 புதிய ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர் என்று தெரிகிறது. இது குறித்து அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது.
தற்போது உத்தரகாண்ட் மாநில ஆளுநராக இருக்கும் மார்க்ரெட் ஆல்வா தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்பதால் உத்தரகண்ட் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்த பிரபுராவ் மரணம் அடைந்துவிட்டார். இதையடுத்து பஞ்சாப் ஆளுநர் சிவராஜ் பாட்டீல் ராஜஸ்தான் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் ராஜஸ்தானுக்கும் புதிய ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
டெல்லி ஆளுநர் தேஜேந்திர கன்னாவின் பதவிக்காலம் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அவரை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications