Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்மநாப சுவாமி கோவில் புதையல் பாதுகாப்பு: 5 நபர் குழு நியமனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதையலைப் பாதுகாக்க பரிந்துரைகள் அளிக்க 5 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் 5 அறைகள் திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டன. இந்த 5 அறைகளில் மட்டுமே ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தங்க, வைர, வைடூரிய நகைகள், சிலைகள், நாணயங்கள் கிடைத்தன.

ஆனால் 6-வது அறையின் பூட்டைத் திறக்க முடியவில்லை. உடைத்தால் உள் இருக்கும் பழமையான பொருட்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்பதால் உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு உச்ச நீதிமன்றம் இன்னும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

இந்நிலையில் கோவில் புதையலைப் பாதுக்காக்க பரிந்துரைகள் அளிப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு தேசிய அருங்காட்சியக இயக்குனர் தலைமை வகிப்பார்.

கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மதிப்பிடும் முன்பு அவற்றின் மதிப்பை யூகித்து செய்தி வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

புதையலை கணக்கெடுக்கையில் ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதி்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் புதையல் செய்தி கேட்டு வெளிநாட்டில் இருந்தெல்லாம் பத்திரிக்கையாளர்கள் திருவனந்தபுரத்திற்கு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+