பத்மநாப சுவாமி கோவில் புதையல் பாதுகாப்பு: 5 நபர் குழு நியமனம்
டெல்லி: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதையலைப் பாதுகாக்க பரிந்துரைகள் அளிக்க 5 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் 5 அறைகள் திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டன. இந்த 5 அறைகளில் மட்டுமே ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தங்க, வைர, வைடூரிய நகைகள், சிலைகள், நாணயங்கள் கிடைத்தன.
ஆனால் 6-வது அறையின் பூட்டைத் திறக்க முடியவில்லை. உடைத்தால் உள் இருக்கும் பழமையான பொருட்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்பதால் உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு உச்ச நீதிமன்றம் இன்னும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் கோவில் புதையலைப் பாதுக்காக்க பரிந்துரைகள் அளிப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு தேசிய அருங்காட்சியக இயக்குனர் தலைமை வகிப்பார்.
கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மதிப்பிடும் முன்பு அவற்றின் மதிப்பை யூகித்து செய்தி வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
புதையலை கணக்கெடுக்கையில் ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதி்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் புதையல் செய்தி கேட்டு வெளிநாட்டில் இருந்தெல்லாம் பத்திரிக்கையாளர்கள் திருவனந்தபுரத்திற்கு வருகின்றனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications