பத்மநாப சுவாமி கோவில் புதையல் பாதுகாப்பு: 5 நபர் குழு நியமனம்
டெல்லி: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதையலைப் பாதுகாக்க பரிந்துரைகள் அளிக்க 5 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் 5 அறைகள் திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டன. இந்த 5 அறைகளில் மட்டுமே ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தங்க, வைர, வைடூரிய நகைகள், சிலைகள், நாணயங்கள் கிடைத்தன.
ஆனால் 6-வது அறையின் பூட்டைத் திறக்க முடியவில்லை. உடைத்தால் உள் இருக்கும் பழமையான பொருட்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்பதால் உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு உச்ச நீதிமன்றம் இன்னும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் கோவில் புதையலைப் பாதுக்காக்க பரிந்துரைகள் அளிப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு தேசிய அருங்காட்சியக இயக்குனர் தலைமை வகிப்பார்.
கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மதிப்பிடும் முன்பு அவற்றின் மதிப்பை யூகித்து செய்தி வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
புதையலை கணக்கெடுக்கையில் ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதி்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் புதையல் செய்தி கேட்டு வெளிநாட்டில் இருந்தெல்லாம் பத்திரிக்கையாளர்கள் திருவனந்தபுரத்திற்கு வருகின்றனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications