மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்புச் சலுகை- ஜெ
சென்னை: போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்புச் சலுகை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பான அரசு வெளிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில்தான் அதாவது 1992-93ல்தான் ஊனமுற்றோர் மறுவாழ்வு இயக்ககம் ஏற்படுத்தப்பட்டது.
அரசின் உதவிக்கரம் மாற்றுத் திறனாளிகளைச் சென்றடையும் வகையில் பல சிறப்பான திட்டங்களை இந்த அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பணியில் ஒதுக்கப்படுமென்றும், அதை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு/ அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்கள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை கொண்டாடும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3ம் நாள் ஊதியத்துடன் கூடிய சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications