மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்புச் சலுகை- ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்புச் சலுகை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இது தொடர்பான அரசு வெளிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில்தான் அதாவது 1992-93ல்தான் ஊனமுற்றோர் மறுவாழ்வு இயக்ககம் ஏற்படுத்தப்பட்டது.

அரசின் உதவிக்கரம் மாற்றுத் திறனாளிகளைச் சென்றடையும் வகையில் பல சிறப்பான திட்டங்களை இந்த அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பணியில் ஒதுக்கப்படுமென்றும், அதை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு/ அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்கள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை கொண்டாடும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3ம் நாள் ஊதியத்துடன் கூடிய சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+