டி.ஆர்.பாலு மீது முந்திரி தோப்பு அபகரிப்பு புகார்

தமிழகம் முழுவதும் திமுகவினர் மீது நில அபகரிப்பு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதற்காக தமிழக காவல்துறையில் நில மீட்புப் பிரிவு என தனிப் பிரிவு துவங்கி செயல்பட்டு வருகிறது.
இப்பிரிவில் திமுக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர் மீதும், திமுக முக்கிய நிர்வாகிகள் மீதும் நில அபகரிப்பு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான டி.ஆர்.பாலு மீது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வேலாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. விவசாயி. இவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மகேஷ்வரியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வேலாடிப்பட்டி கிராமத்தில் எனக்கு சொந்தமாக 21 ஏக்கர் 12 சென்ட் முந்திரி தோப்பு உள்ளது.
எனது தோப்பை சுற்றியுள்ள நிலங்களை திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு வாங்கியுள்ளார். எனக்கு சொந்தமான முந்திரி தோப்பையும் விலைக்கு கேட்டு டி.ஆர். பாலு ஏற்கெனவே நெருக்கடி கொடுத்தார். ஆனால் நான் எனது நிலத்தை விற்க விரும்பவில்லை என கூறிவிட்டேன்.
இந்த நிலையில் எனது தோப்புக்குள் அத்துமீறி நுழைந்து அதை அழித்து எனது நிலத்தை அபகரித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி எனது முந்திரி தோப்பை மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications