டி.ஆர்.பாலு மீது முந்திரி தோப்பு அபகரிப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

TR Baalu
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான முந்திரி தோட்டத்தை திமுக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அபகரித்துக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் திமுகவினர் மீது நில அபகரிப்பு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதற்காக தமிழக காவல்துறையில் நில மீட்புப் பிரிவு என தனிப் பிரிவு துவங்கி செயல்பட்டு வருகிறது.

இப்பிரிவில் திமுக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர் மீதும், திமுக முக்கிய நிர்வாகிகள் மீதும் நில அபகரிப்பு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான டி.ஆர்.பாலு மீது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வேலாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. விவசாயி. இவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மகேஷ்வரியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வேலாடிப்பட்டி கிராமத்தில் எனக்கு சொந்தமாக 21 ஏக்கர் 12 சென்ட் முந்திரி தோப்பு உள்ளது.

எனது தோப்பை சுற்றியுள்ள நிலங்களை திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு வாங்கியுள்ளார். எனக்கு சொந்தமான முந்திரி தோப்பையும் விலைக்கு கேட்டு டி.ஆர். பாலு ஏற்கெனவே நெருக்கடி கொடுத்தார். ஆனால் நான் எனது நிலத்தை விற்க விரும்பவில்லை என கூறிவிட்டேன்.

இந்த நிலையில் எனது தோப்புக்குள் அத்துமீறி நுழைந்து அதை அழித்து எனது நிலத்தை அபகரித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி எனது முந்திரி தோப்பை மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+