திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது மேலும் ஒரு நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கே. கதிர்வேல் என்பவர் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது ஹோட்டல் அபகரிப்பு புகார் கொடுத்தார். இந்நிலையில் இன்று திருச்சியில் இன்னொருவர் நேரு மீது நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார்.
திருச்சி, பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் ஒய்.சாலமன் தேவராஜ். அவர் இன்று திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் முன்னாள் கே.என்.நேரு மற்றும் துணை மேயர் மற்றும் திமுக நகரச் செயலாளரான அன்பழகன் ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்தார்.
இதையடுத்து கே.என்.நேரு மற்றும் அன்பழகன் மீது நில அபகரிப்பு புகார் பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications