மதுரை இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் பெண் புரோக்கர் கைது

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: மதுரையை சேர்ந்த இளம்பெண் கற்பழி்ப்பு வழக்கில், பல இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த வாகைக்குளத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கற்பழிப்பு வழக்கில், 21 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, இதுவரை 6 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில், இளம்பெண்ணை பல இடங்களுக்கு அனுப்பி, விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ராமநாதபுரம், ஓம்சக்தி நகரை சேர்ந்த பிரியா(30) என்ற அவரிடம் நடத்திய விசாரணையில், ஏழ்மையில் தவிக்கும் பல பெண்களை மூளை சலவை செய்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். ராமநாதபுரத்தில் உள்ள பல முக்கிய பிரமுகர்களுக்கு, வெளியூர்களில் இருந்து விபசார புரோக்கர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் முக்கியஸ்தர்களிடம் விபசார பெண்களை அனுப்பி, பதவிஉயர்வு, இடமாற்றம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை பலருக்கும் பெற்று தருவதில் பிரியா முக்கிய பங்காற்றி உள்ளார்.

ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரியா, கோர்ட் உத்தரவின்படி, சிறையில் அடைக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+