சமச்சீர் கல்வித் திட்டத்திற்காக சிறைசெல்லவும் நான் தயார்-டாக்டர் ராமதாஸ்
திண்டிவனம்: சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி, ஆகஸ்ட் 2ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும், அப்போது கைது செய்தால் சிறை செல்லவும் தயார் என, பாமாக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
பதவியேற்று 75 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், அதிமுக அரசு எதிர்க் கட்சிகளை பழிவாங்குவதை விடுத்து, மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முயல வேண்டும். லோக்பால் சட்டத்தின் வரம்பிற்கும் பிரதமர் உட்பட அனைவரும் கொண்டு வரப்பட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுப் பிரச்சனையில் கேரளா போன்ற மாநிலங்களை தமிழகம் பின்பற்றலாம்.
சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த கோரி, ஜூன் 20ம் தேதி சென்னையில் பாமாக போராட்டம் நடத்தியது. இதையடுத்து ஆகஸ்ட் 2ம் தேதி மீண்டும் தமிழகம் முழவதும் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அப்போது திண்டிவனத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ள என்னை, கைது செய்தால் சிறை செல்லவும் தயாராக உள்ளேன்.
உச்சநீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பைப் பற்றி தமிழக அரசு கவலைப்படாமல் உடனடியாக பாடப் புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு கொடுத்து சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications