ஆந்திராவில் பிறந்து 10 நாளே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்
அனந்தபூர்: ஆந்திராவில் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை அதன் பெற்றோரே உயிருடன் புதைத்த சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டுர்தி மண்டலத்தில் உள்ள எனுமலா தோடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேகர்(26). அவர் கடந்த ஆண்டு லதா(23) என்னும் பெண்ணை மணந்தார்.
லதாவுக்கு கடந்த 13 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் உதடு பிளவுபட்டிருந்தது. இதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் குழந்தையை கல்யாணதுர்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து அவர்கள் குழந்தையுடன் வெளியேறினர். வீட்டிற்கு செல்லும் வழியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள ஒரு டேங்க் அருகில் குழந்தையை கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயிருடன் புதைத்தனர்.
மறுநாள் அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் குழந்தையை உயிருடன் மீட்டு கல்யாணதுர்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் குழந்தையின் பெற்றோரை அழைத்துப் பேசினர். அறுவை சிகிச்சை செய்ய பணமில்லாததால் தான் உயிருடன் புதைத்ததாகத் தெரிவித்தனர். குழந்தையை வீட்டுக்கு கொண்டு செல்ல சம்மதித்தனர்.












Click it and Unblock the Notifications