மாஜி உளவுத்துறை அதிகாரி கூடுதல் டிஜிபி ஜாபர்சேட் சஸ்பெண்ட்

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் உளவுப்பிரிவு தலைவராக இருந்தவர் ஜாபர் சேட். முதல்வராக இருந்த கருணாநிதியிடம் தனி செல்வாக்கு வைத்திருந்தார். அந்த சமயத்தில் விதிமுறைகளுக்குப் புறம்பாக ஜாபர்சேட்டுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் இடம் ஒதுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுகுறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனீபர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் ஜாபர்சேட், அவரது நண்பர்கள், மாமனார் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களிலும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. மண்டபத்தில் கூடுதல் டிஜிபியாக இருந்து வரும் ஜாபர்சேட்டின் மண்டபம் அலுவலகத்திலும் ரெய்டு நடந்தது.
இதில் பல்வேறு சிடிக்கள், ஐபாட்கள் உள்ளிட்டவை சிக்கின. அதில் கருணாநிதி தனது குடும்பத்தினருடன் பேசும் பேச்சையே ஜாபர்சேட் டேப் செய்து வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்தன.
இந்த நிலையில் ஜாபர்சேட்டை சஸ்பெண்ட் செய்து உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ் ராம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். விரைவில் சேட்டிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications